உள்ளூர் செய்திகள்

லாரி மோதி 7 ஆடுகள் பலி

Published On 2022-09-09 09:01 GMT   |   Update On 2022-09-09 09:01 GMT
  • லாரி மோதி 7 ஆடுகள் பலியாகின
  • பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே களரம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் செந்தில் (வயது45). இவரது மனைவி தனலெட்சுமி. இவர் வளர்க்கும் ஆடுகளை அருகிலுள்ள வயலில் மேய்த்து விட்டு பட்டியில் அடைப்பதற்காக ஓட்டி சென்றார்.

அப்போது துறையூர் - பெரம்பலூர் செல்லும் சாலையில் மர இழைப்பு பட்டறைக்கு எதிரே வந்த போது அவ்வழியே அதிவேகமாக வந்த சிமெண்ட் லாரி ஆடுகள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்தில் இறந்தது, மேலும் ஒரு ஆடு காயமடைந்தன.

இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 50க்குமேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவிடத்திற்கு சென்று மறியல் ஈடுபட்டோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விபத்தினை ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இறந்த ஆட்டிற்கு நிவாரண தொகை பெற்றுத்தரப்படும் என உறுதி கூறியதன்பேரில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News