உள்ளூர் செய்திகள்

ரவுடியை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

Published On 2023-03-07 14:32 IST   |   Update On 2023-03-07 14:32:00 IST
  • தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
  • கைது செய்யப்பட்டவரில் ஒருவர் ரவுடி

பெரம்பலூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் செல்வா என்கிற நீலகண்டன் (வயது 28). ரவுடியான இவர் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் டாஸ்மாக் கடை அருகே அவரது நண்பர்களான திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சரவணன் (22), இந்திரா நகரை சேர்ந்த சீனி என்கிற கவுதம் (22), செஞ்சேரி தெற்கு தெருவை சேர்ந்த ராகுல் (21) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், அவர்கள் நீலகண்டனை தாக்கினர்.இதில் 18 வயது சிறுவன் பாட்டிலால் தாக்கியதில் நீலகண்டனின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் தப்பி சென்றனர். காயமடைந்த நீலகண்டன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் வந்து மேற்கண்ட சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், கவுதம், ராகுல் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சரவணனும் ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News