உள்ளூர் செய்திகள்

மின்மாற்றி வெடித்து 2 பேர் காயம்

Published On 2023-04-23 06:05 GMT   |   Update On 2023-04-23 06:05 GMT
  • மின்மாற்றி வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர்
  • மின்மாற்றியில் எரிந்து கொண்டிருந்த தீயானது தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தானாக அணைந்து விட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள மின்மாற்றி நேற்று மாலை திடீரென்று வெடித்து தீப்பிடித்ததால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மின்மாற்றி வெடித்ததில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மின்மாற்றியில் எரிந்து கொண்டிருந்த தீயானது தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தானாக அணைந்து விட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News