உள்ளூர் செய்திகள்

முகாமில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.  

பாளையில் மின்வாரியம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-02-10 15:08 IST   |   Update On 2023-02-10 15:08:00 IST
  • மக்கள் குறைதீர்க்கும் முகாம் பாளை தியாகராஜநகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
  • நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் பாளை தியாகராஜநகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் கிராமப்புறம் ஜான் பிரிட்டோ மற்றும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறி யாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News