உள்ளூர் செய்திகள்

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள்.

வேதாரண்யம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களால் மக்கள் அவதி

Published On 2022-10-27 07:10 GMT   |   Update On 2022-10-27 07:10 GMT
  • கடைவீதி பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.
  • இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் கடைவீதி மற்றும் தோப்புத்துறை இலந்தையடி ரஸ்தா நகர் பகுதிகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகமாக கூடும் இடங்களாகும்.

நாள்தோறும், கடைவீதி பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவது வழக்கம். நகரின் முக்கிய பகுதியாக காணப்படும் இந்த இடங்களில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. நடந்து செல்வோரை சில நாய்கள் கடித்துவிடுகிறது.

மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், பொதுமக்கள் தினமும் அச்சத்துடனே செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News