உள்ளூர் செய்திகள்

மகாளய அமாவாசை - புனித தலங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்

Published On 2023-10-14 02:48 GMT   |   Update On 2023-10-14 02:48 GMT
  • மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.
  • மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

சென்னை:

மகாளய என்றால் `கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.

இந்நிலையில், தஞ்சை, நாமக்கல், கடலூர், திருச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் மகாளய அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி மறைந்த முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News