உள்ளூர் செய்திகள்

மேல வீரபாண்டியபுரம் கிராமத்தில் எரியாமல் உள்ள தெருவிளக்குளால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

புதியம்புத்தூர் அருகே 20 நாட்களாக தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி

Published On 2023-07-14 08:42 GMT   |   Update On 2023-07-14 08:42 GMT
  • தெருவிளக்குகள் எரியாததால் இரவில் கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது.
  • சுவிட்ச் கோளாறு,மின் இணைப்பில் பிரச்சினை இருந்தால் அதை மின்வாரியமே சரி செய்ய வேண்டும்.

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர் அருகே உள்ள ஜம்புலிங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல வீரபாண்டியபுரம் கிராமத்தில் 30 தெரு மின்விளக்குகள் உள்ளன. இந்த தெரு மின்விளக்குகள் கடந்த 20 நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த ஊரைசுற்றி விவசாய தோட்டங்கள் இருப்பதால் பாம்பு போன்ற விஷ சந்துகளால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. தெரு விளக்கு பராமரிப்பு பணியை ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. தெரு விளக்கு சுவிட்ச் கோளாறு மற்றும் மின் இணைப்பில் பிரச்சினை இருந்தால் அதை மின்வாரியமே சரி செய்ய வேண்டும். ஜம்புலிங்கபுரம் மன்ற தலைவி செல்வராணி தெரு விளக்கு எரியாதது குறித்தும், அதை சரி செய்ய புதியம்புத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவிதும் மின் இணைப்பு கோளாறு சரி செய்யப்படவில்லை.

மற்ற பணிகளை விட மின்விளக்கு எரிய வைப்பது மின்வாரியம் முக்கியத்துவம் கொடுத்து மின் இணைப்பு பழுதை சரி செய்து மேலவீரபாண்டியபுரம் கிராமத்தில் எரியாமல் இருக்கும்30 தெரு விளக்குகளையும் எரிய வைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News