உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
தருமபுரியில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- சத்துணவு, அங்கன் வாடி, ஊர்புற நூலகர் உள்ளிட்ட தொகு ப்பூதிய ஓய்வூதியர் களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7850,வழங்க வேண்டும்
தருமபுரி,
குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனிச் சாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன்ராஜ், ஜெகதீசன்,வட்ட செய லாளர் முனிராஜ், வட்ட பொருளாளர் பாபு, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சத்துணவு, அங்கன் வாடி, ஊர்புற நூலகர் உள்ளிட்ட தொகு ப்பூதிய ஓய்வூதியர் களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7850,வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர்.