உள்ளூர் செய்திகள்

நாகையில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.

சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

Published On 2023-07-15 08:00 GMT   |   Update On 2023-07-15 08:00 GMT
  • பாலத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
  • வெள்ளையாற்றில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.

நாகப்பட்டினம்:

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முரு கன் தலைமையி லான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி, பழனியாண்டி, மோகன், ராமலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி செருதூர் மீனவ கிரா மத்தின் இடையே வெள்ளையாறில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது வெள்ளை யாற்றை தூர்வாரி தரைதட்டாமல் படகுகள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கிராம மீனவர்கள் கோரிக்கைமனு அளித்தனர்.

மேலும் வெள்ளையாற்றில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டுமென மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கோரிக்கை குழுவினருக்கு விடுத்தார்.

தொடர்ந்து வெள்ளப்ப ள்ளம் மீனவ கிராமம், நாகை ஆதிதிராவிட நல விடுதி, நாகை அரசு மருத்துவமனை, நாகை புயல் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News