உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தேசிய விருது பெற்ற துளசிதரனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய அளவிலான சிலம்ப போட்டி பண்ருட்டி மாணவன் தங்கம் வென்று சாதனை

Published On 2022-06-16 08:12 GMT   |   Update On 2022-06-16 08:12 GMT
  • தேசிய அளவிலான சிலம்ப போட்டி பண்ருட்டி மாணவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • இதில் தமிழகம் சார்பில் பண்ருட்டி மாணவன் துளசிதரன் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

கடலூர்:

பலவேறு பயனுள்ள வேதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் மெத்தனால் என்ற திதேசிய அளவிலான இளையோர் சிலம்பப் போட்டி அரியானாவில் கடந்த 4ந் தேதி 6ம் தேதி வரை நடந்தது. இதில் தமிழகம் சார்பில் பண்ருட்டி மாணவன் துளசிதரன் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.தங்கவென்ற மாணவன் துளசிதரன் நேற்று பண்ருட்டி திரும்பினார். பண்ருட்டியில் அவருக்கு சிலம்பம் கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில்தங்க வென்ற மாணவன் துளசிதரனை பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பண்ருட்டி வீர தமிழர் தற்காப்பு கலை கூடபேரவை சிலம்பம் ஆசிரியர் சிகாமணி,முத்துலிங்கம் தண்டபாணி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News