உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே பரபரப்பு: பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்
- கடலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரால் பரபரப்பு நிலவியது.
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே சுனாமி நகரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி 12- ம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மாணவி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் திடீரென்று மாணவியை கடத்தி சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்து அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வாலிபர் அஜய் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.