உள்ளூர் செய்திகள்

பாளையில் மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை

Published On 2022-09-13 09:02 GMT   |   Update On 2022-09-13 09:02 GMT
  • பாளை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 56).
  • இவர் சமாதானபுரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

நெல்லை:

பாளை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 56). இவர் சமாதானபுரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

கடந்த 10-ந்தேதி தனது குடும்பத்தினருடன் அவர் மதுரைக்கு புறப்பட்டார். தொடர்ந்து வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர். நேற்று மதியம் அவர்கள் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News