உள்ளூர் செய்திகள்

வெண்ணிற ஆடையில் சரஸ்வதி அம்மன்.

சரஸ்வதி அம்மனுக்கு நாளை பாத புஷ்பாஞ்சலி

Published On 2022-10-03 10:01 GMT   |   Update On 2022-10-03 10:01 GMT
  • சரஸ்வதி வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள்.
  • விஜயதசமியன்று இக்கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.

தஞ்சாவூர்:

திருவாரூர்மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூ ரில் கல்விக்கடவுளான சரஸ்வதி கோவில் உள்ளது.

இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோ வில் அமைந்துள்ளது கூத்தனூரில் தான்.

இக்கோவிலில் சரஸ்வதி வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள்.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவில் அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்வான 9-வது நாளில் சரஸ்வதி பூஜையன்று அம்மனுக்கு பாத தரிசனம் நடைபெறும்.

அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.

மேலும், 5-ம் தேதி விஜயதசமியன்று இக்கோவி லில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.

பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் கல்வியில் சிறக்க குழந்தையின் விரல் பிடித்து தானியத்தில் 'அ' எனும் எழுத்தை எழுதி கல்வியை தொடங்குவர்.

குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி பயணத்தை இங்கிருந்து தொடங்குகின்றனர்.

விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிபடுவர்.

Tags:    

Similar News