உள்ளூர் செய்திகள்

பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா

Published On 2023-06-02 16:09 IST   |   Update On 2023-06-02 16:09:00 IST
  • 12 மணி அளவில் சுவாமிக்கு பால்குடம் அபிஷேகம், அதை தொடர்ந்து சத்துரு சம்கார மகா ஹோமம், மகா அபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெற்றது.
  • விழாவையொட்டி லட்சார்ச்சனை, அபிஷேகம், மகாதீப ஆராதனை, தங்க மயில், தங்கரதம் புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றன

கோபி, ஜூன். 2-

கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 30-ந் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

விழாவையொட்டி லட்சார்ச்சனை, அபிஷேகம், மகாதீப ஆராதனை, தங்க மயில், தங்கரதம் புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றன

முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் திருவிழா இன்று 2-ந் தேதி நடை பெற்றது. இதையொட்டி சுப்பிரமணியருக்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை 108 லிட்டர் பால்ஊற்றி தாராபிஷேக நிகழ்ச்சி நடை பெற்றது.

இதை தொடர்ந்து 12 மணி அளவில் சுவாமிக்கு பால்குடம் அபிஷேகம், அதை தொடர்ந்து சத்துரு சம்கார மகா ஹோமம், மகா அபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் கோபி செட்டிபாளையம், கரட்டூர், நாயக்கன் காடு, நல்ல கவுண்டன் பாளையம், கரட்டடிபா ளையம்,

குன்ன த்தூர் கெட்டி செவியூர், கொளப்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

Tags:    

Similar News