உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அருண் தம்புராஜ் நிலையத்தை திறந்து வைத்து கொள்முதல் பணியை தொடங்கி வைத்தார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Published On 2023-02-15 12:55 IST   |   Update On 2023-02-15 12:55:00 IST
  • நடப்பு ஆண்டில் 16 நெல் கொள்முதல் நிலையங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
  • அண்ணாபேட்டை, வாய்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.

முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார் அனைவரையும் வரவேற்றார்.

ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கோமதி தனபால், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-

நாகை மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு 10 நெல் கொள்முதல் நிலையங்களும், நடப்பு ஆண்டில் 16 நெல் கொள்முதல் நிலையங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடுவாஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் வண்டுவாஞ்சேரி, அண்ணாபேட்டை, வாய்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார்.

விழாவில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கர், கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன் மற்றம் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News