உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் 3 இடங்களில் மட்டும் டிஜிட்டல் பேனர் வைக்க அனுமதி

Published On 2023-05-27 12:52 IST   |   Update On 2023-05-27 12:52:00 IST
  • டிஜிட்டல் பேனர்கட்டும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  • பேனர் வைப்பதற்கு அனுமதி இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

கடலூர்:

பண்ருட்டி நகரில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி டி.எஸ்.பி.சபி யுல்லா தலைமையில் பண்ருட்டி போலீஸ் நிலை யத்தில் நடந்தது. கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், புதுப்பேட்டை நந்தகுமார் மற்றும் அனைத்துகட்சி பிர முகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர்கட்டும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் லிங்ரோடு ஜங்ஷன், தட்டாஞ்சாவடி பஸ்நிறுத்தம்,யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தம் ஆகிய 3 இடங்களில் மட்டும் 10 -க்கு10 அடி அளவுள்ள டிஜிட்டல் பேனர்களை போலீஸ் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்றும்இந்த இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பேனர் வைப்பதற்கு அனுமதி இல்லை என்றும்முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News