தை 1 பொங்கல் திருநாளை முன்னிட்டுகோவில்களில் சிறப்பு வழிபாடு
- பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், தை 1ஐ முன்னிட்டு, 42ஆம் ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது.
இதையொட்டி காலை, 4.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் முழங்க காலை, 6.20 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
இதே போல், தை 1 பொங்கல் திருநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்–ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு, பொங்கல் வைத்து படைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்டம் முழுவதும் தை 1ஐ முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.