உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் இயேசுநாதர் சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, கிறிஸ்தவர்கள் சிலுவை சுமந்து ெசல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-04-07 15:18 IST   |   Update On 2023-04-07 15:18:00 IST
  • கிறிஸ்தவ தேவால யங்களில் பெரிய சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கே ற்றனர்.

கிருஷ்ணகிரி,

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் யாவரையும் இரட்சிக்க வந்த இயேசு, யுத மன்னன் பிலாத்துவால் சிலுவை தீர்ப்பு கூறப்பட்டு, தலையில் முள் கிரீடம் அணிவித்து, கல்வாரி மலைக்கு சிலுவையுடன் இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் அறைந்து இயேசு கொல்லப்பட்டார்.

இதனை நினைவு கூறும் வகையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் இந்த நாளை புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் ஆலயத்தில், புனித வெள்ளியையொட்டி பெரிய சிலுவைப்பாதை நடைபெற்றது.

பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பெரிய சிலுவைப் பாதையின் போது, ஆலய வளாகத்தினை சுத்தி அமைக்கப் பட்டுள்ள 14 சிலுவைப்பாதை ஸ்தலங்களின் முன்பாக, இயோசுநாதர் சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோள்களில் பாரமான சிலுவையை சுமந்து, தங்களை வருந்திக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கே ற்றனர்.

இதே போல கந்திகுப்பம், சுண்டம்பட்டி,எலத்தகிரி, புஷ்பகிரி ஓசூர், தேன்கனி க்கோட்டை, சூளகிரி என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவால யங்களில் பெரிய சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி புனித இருதய ஆண்டவர் ஆலயம், கோவிலூர் சவேரியார் ஆலயம், பொம்மிடி கோடிய அற்புதர், புனித அந்தோனியார் ஆலயம், பி.பள்ளிப்பட்டி லூர்து அன்னை ஆலயம், அரூர் இருதய ஆண்டவர் ஆலயம், பாப்பிரெட்டிப்பட்டி வேளாங்கண்ணி ஆலயம், தென்கரை கோட்டை பாத்திமா அன்னை ஆலயம் உள்பட மாவட்டம் முழு வதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சிகளை அந்தந்த ஆலயபங்கு தந்தை களும், பங்கு குழுவினரும் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News