உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மூதாட்டியின் காதை அறுத்து நகைபறிப்பு

Published On 2022-11-23 09:55 GMT   |   Update On 2022-11-23 09:55 GMT
  • மர்மநபர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியின் தலையில் செங்கலால் தாக்கி உள்ளார்
  • 2 பவுன் தங்க செயினையும், அவரது செல்போனையும் பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராசம்மாள் (வயது 81). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ராசம்மாள் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு மர்மநபர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ராசம்மாளின் தலையில் செங்கலால் தாக்கி உள்ளார். இதில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரின் காதை அறுத்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல் மற்றும் 2 பவுன் தங்க செயினையும், அவரது செல்போனையும் பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.

இன்று காலை ராசம்மாள் வீட்டில் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News