உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கூடலூரில் முதியவர் தற்கொலை

Published On 2022-10-20 05:38 GMT   |   Update On 2022-10-20 05:38 GMT
  • உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர் மனமுடைந்து வீட்டில் அரளிவிதையை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
  • கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்:

கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(55). இவருக்கு கடந்த சில வருடங்களாக பிரசர் இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த லட்சுமணன் வீட்டில் அரளிவிதையை அரைத்து தின்று மயங்கினார்.

கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அவரை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News