உள்ளூர் செய்திகள்

சரவணம்பட்டியில் முதியவர் மாயம்

Published On 2023-05-31 09:42 GMT   |   Update On 2023-05-31 09:42 GMT
  • மல்லப்பனும், அவரது மனைவியும் மகளுன் தங்கி இருந்தனர்.
  • மல்லப்பனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோட்டையன் தோப்பு.

கோவை,

கோவை சரவணம்பட்டி, கிருஷ்ணாபுரம், அப்பர் தெருவை சேர்ந்தவர் மல்லப்பன் (வயது 70). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்தார். திடீரென அவர் மாயமானார். அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மல்லப்பன் மனைவி ராமலட்சுமி, சரவணம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மல்லப்பனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோட்டையன் தோப்பு ஆகும். அவரது மகள் கோவையில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறார். இதனால் மல்லப்பனும் மகளுடனே தங்கியிருந்தார். இந்தநிலையில் தான் அவர் திடீரென மாயமாகி விட்டார். இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் சரவணம்பட்டி போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News