உள்ளூர் செய்திகள்

கார் மோதியதில் பலியான முதியவரை படத்தில் காணலாம்.

கார் மோதி முதியவர் பலி

Published On 2023-05-15 14:32 IST   |   Update On 2023-05-15 14:32:00 IST
  • ஓசூருக்கு சென்ற கார் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் பலியானார்.
  • காவேரிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு பழனியில் இருந்து ஓசூருக்கு சென்ற கார் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சாலை விபத்தில் பலியான முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தில் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News