உள்ளூர் செய்திகள்
- முனீஸ்வரன் கோவில் பக்கமாக முனியப்பன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- முனியப்பாவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா தோரிப்பள்ளி பக்கமுள்ள கானலட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 63). கூலித் தொழிலாளி. கடந்த 1-ந் தேதி செக்கார்லு மலை பகுதியில் முனீஸ்வரன் கோவில் பக்கமாக முனியப்பன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேனீக்கள் அவரை கொட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த முனியப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முனியப்பன் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசா––ரணை நடத்தி வருகிறார்கள்.