உள்ளூர் செய்திகள்

சரக்கு ஆட்டோ மோதி முதியவர் சாவு

Published On 2022-09-10 09:05 GMT   |   Update On 2022-09-10 09:05 GMT
  • சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக அம்மாசி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
  • அம்மாசி தலை, கால்களில் அடிபட்டு மயங்கி கிடந்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கட்சிபள்ளி அடுத்த அழகப்பன் பாளையம் பகுதியை சேர்ந்தவர்அம்மாசி (வயது 70). இவர் நேற்று இரவு 9 மணி அளவில் லகுவம்பட்டி அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியே வந்த ஒரு சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக அம்மாசி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

இதில் அம்மாசி தலை, கால்களில் அடிபட்டு மயங்கி கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த அம்மாசி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News