உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த முதியவர்.

நத்தம் அருகே மாந்தோப்பில் முதியவர் பிணம்

Published On 2023-04-29 07:32 GMT   |   Update On 2023-04-29 07:32 GMT
இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

நத்தம்:

நத்தம் அருகே புதுப்பட்டி சடையம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News