உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தோட்டத்தில் மருந்து அடித்த முதியவர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-04-04 06:43 GMT   |   Update On 2023-04-04 06:43 GMT
அணைப்பட்டிக்கு சென்று மருந்து அடித்துவிட்டு வந்தவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் கணேசன்(60). இவர் மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

சம்பவத்தன்று அணைப்பட்டிக்கு சென்று மருந்து அடித்துவிட்டு வந்தவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Tags:    

Similar News