உள்ளூர் செய்திகள்

காக்களூர் ஏரியில் மூழ்கி முதியவர் பலி

Published On 2022-07-19 12:32 IST   |   Update On 2022-07-19 12:32:00 IST
  • காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே உள்ள ஏரியில் கால் கழுவுவதற்காக சென்றார்.
  • நீச்சல் தெரியாத சதாசிவம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 75). இவர் காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே உள்ள ஏரியில் கால் கழுவுவதற்காக சென்றார்.

அப்போது கால் தவறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாத சதாசிவம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News