உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் அருகே ரத்த காயத்துடன் முதியவர் பிணம் - யார் அவர்? போலீஸ் விசாரணை

Published On 2022-11-14 14:38 IST   |   Update On 2022-11-14 14:38:00 IST
  • பன்னம்பாறை விலக்கில் செட்டிகுளம் சாலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்
  • இறந்து கிடந்த நபர், அந்த பகுதியில் சுற்றித்திரிந்தவர் என்பது தெரியவந்தது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கில் செட்டிகுளம் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் ரத்த காயம் காணப்பட்டது. லுங்கி மட்டும் அணிந்து காணப்படும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம், சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ. விஜயகுமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்த நபர், அந்த பகுதியில் சுற்றித்திரிந்தவர் என்பது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாகனத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News