உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு

Published On 2023-08-28 09:48 GMT   |   Update On 2023-08-28 09:48 GMT
  • சரபோஜிராஜபுரம் -வடக்குமாங்குடி சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
  • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலக கண்காணிப்பு பொறியாளர் கவிதா வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சக்கராப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் சிமெண்ட் சாலை பணிகள், பாய் நெசவு பணி கட்டிடம், வழுத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டம், ஆதி திராவிட நல பள்ளி கட்டிடம், சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம், காளான் வளர்ப்பு மையம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டம், சரபோஜிராஜபுரம் வடக்குமாங்குடி சாலை பணிகள், கல்வெட்டு பணிகள்,

ஆதனூர் ஊராட்சியில் சோழங்கநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம், குழந்தை நேய பள்ளி கட்டிடம் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு பொறியாளர் கவிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது உடன் செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News