உள்ளூர் செய்திகள்

மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை அதிகாரி யஸ்வந்த்சாய் ஆய்வு செய்தார். 

நல்லூர், நகர் ஊராட்சிகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை ஆய்வு செய்த அதிகாரி

Published On 2022-09-30 07:30 GMT   |   Update On 2022-09-30 08:45 GMT
  • மத்திய அரசை சார்ந்த உலக சாதனைக்கான நடுவர் ஆய்வு மேற்கொண்டார்.
  • தண்ணீர் விட்டு சோதனை மேற்கொண்டார்.

கடலூர்:

வேப்பூர் அருகிலுள்ள நகர், நல்லூர், ஐவதகுடி, ஏ, சித்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை மத்திய அரசை சார்ந்த உலக சாதனைக்கான நடுவர் ஆய்வு மேற்கொண்டார். நகர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, சத்துணவு சமையல் கூடம், நடுநிலை பள்ளியின் புதிய கட்டிடம் உள்ளிட்ட ஆறு இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை பார்வையிட்ட யஸ்வந்த்சாய் அதில் தண்ணீர் விட்டு சோதனை மேற்கொண்டார்.

அப்போது நல்லூர் பி.டி.ஒ., சங்கர், ஜெயக்குமாரி, என்ஜினியர்கள் ராஜேந்தி ரன், சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், துணை தலைவர் ராம சாமி, ஊராட்சி செய லாளர் தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்த னர். நல்லூர் ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அமைந்துள்ள வட்டார சேவை மையம், ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை ஆய்வு செய்தார் அப்போது பிடிஒ,இன்ஜினியர்கள் ஆகியோருடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உதயக்குமார், , நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன், ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News