உள்ளூர் செய்திகள்

அருண்குமார்

பிரபல மோட்டார்சைக்கிள் திருடன் கைது

Published On 2022-11-25 09:32 GMT   |   Update On 2022-11-25 09:32 GMT
  • கண்டாபுரத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் (37) என்பதும், மோட்டார்சைக்கி ளை திருடியது இவர் தான் என்பதும் தெரியவந்தது.
  • இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு, அருண்பிரகாஷ்-ஐ ைகது செய்தனர்.

குமாராபாளையம்:

குமார பாளையம் காளியண்ணன் நகர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 32). இவர் சிமெண்ட் கடை வைத்து தொழில் செய்து வருபவர். கடந்த 3-ந்தேதி மாலை 6 மணியளவில் ராஜம் தியேட்டர் அருகே ஓட்டல் கடையில் டிபன் வாங்கி கொண்டு திரும்ப வந்து பார்க்கும் போது, ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதே போல் குமார பாளையம் அருகே கத்தேரி, சாமியம்பாளையம் பகுதி யில் வசிப்பவர் கார்த்தி (26). எலெக்ட்ரிசியன்.

கடந்த மாதம் 10-ந்தேதி சேலம் சாலை ரெயின்போ கேபிள் அலுவலகத்தின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று வேலையை முடித்து விட்டு வெளியில் வந்து பார்க்கும் போது, வாகனத்தை காணவில்லை.

இது குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் காவிரி நகர் புதிய பாலம் அருகே ரோந்து சென்ற போது, அவ்வழியே மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாத்தனர்.

விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் (37) என்பதும், மோட்டார்சைக்கி ளை திருடியது இவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு, அருண்பிரகாஷ்-ஐ ைகது செய்தனர்.

Tags:    

Similar News