உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி

Published On 2022-11-20 09:30 GMT   |   Update On 2022-11-20 09:30 GMT
  • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

அரியானவை சேர்ந்தவர் குறிஜித் சய்யது (வயது 45). தொழிலாளி. இவர் ஹரியானவில் இருந்து கண்டெயினர் லாரியில் மாட்டு தீவனங்களை ஏற்றி கோவை வந்தார். பின்னர் கோவையில் தீவனங்களை இறக்கிவிட்டு அரியான திரும்பினார். அப்போது லாரி வடக்கிபாளையம் சூலக்கல் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது லாரியின் மேலே மின்சார வயர் உரசியது. அதனை குறிஜித் சய்யது மரக்கட்டையால் நகர்த்தினார்.

அதில் வயர் தவறி அவர் மீது பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடக்கிபா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News