- ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்னாள் மக்கள் நல பணியாளர்களுக்கு பணி ஒதுக்கப்படுகிறது.
- 13-ந் தேதி பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நலப்பணியாளர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
எனவே 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்கள் விருப்ப கடிதம் சமர்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாக தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்பட உள்ள பணியில் சேர்ந்து பணியாற்றுவதற்கான விருப்ப கடிதத்தையும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) யிடம் வருகிற 13 முதல் 18-ந் தேதிக்குள் வழங்கிட தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு விண்ணப்பிப் பவர்கள் மட்டும் இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால் இந்த அறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.