உள்ளூர் செய்திகள்

கைதான 5 பேரை படத்தில் காணலாம்.

நெய்வேலியில் ரவுடி வெட்டிக்கொன்ற கூட்டாளிகள் அதிரடி கைது: பரபரப்பு தகவல்கள்

Published On 2022-08-14 07:53 GMT   |   Update On 2022-08-14 07:53 GMT
  • நெய்வேலியில் ரவுடி வெட்டிக்கொன்ற கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
  • வீரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

கடலூர்:

நெய்வேலி வட்டம் 30 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது43.). பிரபல ரவுடியான வீரமணி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. நேற்று அதிகாலை வீரமணியை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அவர் தாய் மற்றும் அவர் உறவினர்கள் வீரமணி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நெய்வேலி  போலீஸ் டி.எஸ்.பி. ராஜேந்திரன், நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பென்டர் லதா மற்றும் போலீசார் வீரமணி படுகொலை நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ரவுடி வீரமணியின் கூட்டாளிகள் சேர்ந்து இந்த கொலையை செய்து உள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக நெய்வேலி டவுன் ஷிப் வட்டம் 21- ஐ சேர்ந்த குணசீலன், மகேஷ்குமார், சந்திரசேகர், பார்த்திபன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News