உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் புதிய மின் மாற்றி பிரிவை திறந்து வைத்த போது எடுத்த படம். அருகில் துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளார்


ஆறுமுகநேரியில் புதிய மின்மாற்றி திறப்பு

Published On 2022-08-23 07:30 GMT   |   Update On 2022-08-23 07:30 GMT
  • ஆறுமுகநேரி பேயன்விளை ஐயன்நகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை இருந்து வந்தது. அங்கு புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
  • ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார்.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பேயன்விளை ஐயன்நகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அங்கு புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் வழிகாட்டுதலில் ரூ.9.3 லட்சம் மதிப்பில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.

இதன் தொடக்க விழா ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் அ.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. உதவி மின் பொறியாளர் ஜெபஸ் சாம் முன்னிலை வகித்தார். போர்மேன் திரவியம் வரவேற்று பேசினார்.

ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார். 8-வது வார்டு கவுன்சிலர் புனிதா சேகர், நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன், காமராஜ், அஜித், விஜய், ராஜன், மகாராஜன், முத்துசூர்யா, வனகார்த்திக், வேல் குமார், பேச்சிமுத்து, மாயாண்டி, மாரியப்பன், ராமமூர்த்தி, ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News