உள்ளூர் செய்திகள்
- சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதிய தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு இன்று அதற்கான பணிகள் தொடங்கியது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் குறிப்பாக 37-வது வார்டுக்கு உட்பட்ட
மங்கம்மாள் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தார் சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. சமீபத்தில் அந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு இன்று அதற்கான பணிகள் தொடங்கியது.புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மண்டல சேர்மன் பிரான்சிஸ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.