உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு

Published On 2023-08-28 14:50 IST   |   Update On 2023-08-28 14:50:00 IST
  • 18-ந் தேதி தனது மனைவி–யுடன் மாமனார் வீட்டிற்கு கோபாலகிருஷ்ணன் சென்றார்.
  • வீட்டிற்கு திரும்பி சென்ற போது ஆலமரத்துப்பட்டி என்ற இடத்தில் வண்டி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் நாகாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கோபால–கிருஷ்ணன் (வயது23).

கட்டிட மேஸ்திரி

கட்டிட மேஸ்திரியான இவருக்கும், நாகதாசம்–பட்டியைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி தனது மனைவி–யுடன் மாமனார் வீட்டிற்கு கோபாலகிருஷ்ணன் சென்றார். அப்போது அவர் மாமனார் வீட்டில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

வண்டியை உறவினர் பழனி என்பவர் ஓட்டி சென்றார். பின்னால் கோபாலகிருஷ்ணன் அமர்ந்து இருந்தார்.

அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்ற போது ஆலமரத்துப்பட்டி என்ற இடத்தில் வண்டி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் கோபால கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம்–பக்கத்தினர் மீட்டு சிகிச்–சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ–மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபால–கிருஷ்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாப்பாரப்–பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 மாதங்களில் புதுமாப்–பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்களி–டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி–யுள்ளது.

Tags:    

Similar News