உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் லாபத்தொகை ரூ.14.68 லட்சம்

Published On 2022-08-03 09:21 GMT   |   Update On 2022-08-03 09:21 GMT
  • நெல்லை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் வருடாந்திர பேரவை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
  • கூட்டத்தில் 2019 -2020 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் வருடாந்திர பேரவை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைவர் டாக்டர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.

செயலாளர் அருணாச்ச லம் முன்னிலை வகித்தார். உப தலைவர் சின்னத்துரை, இயக்குனர்கள் அருந்தவசு, கணேசன், சரவண கார்த்திகேயன், ராதா கிருஷ்ணன், ரோஸ்மேரி ஜானகிராமன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2019 -2020 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான மொத்த லாபத்தொகை ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 419 என கணக்கிடப்பட்டது.

இதன் பின்னர் இந்த ஆண்டுக்கான கடன் வழங்கும் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தவும், இதேபோல் பங்கு தொகையையும் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7ஆயிரத்து 500 ஆக உயர்த்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News