உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி படுகாயம்

Published On 2023-10-16 09:41 GMT   |   Update On 2023-10-16 09:41 GMT
விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள வயலூர் ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி மேம்பால பக்கவாட்டு தடுப்புச் சுவரில் பலமாக மோதியது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களான மணிமாறன், அபிஷேக் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மங்கலம்பேட்டை நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தார்.

அப்போது விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள வயலூர் ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி மேம்பால பக்கவாட்டு தடுப்புச் சுவரில் பலமாக மோதியது. இதில் சங்கருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.அவ்வழியே சென்றவர்கள் சங்கரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News