உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே : பெற்றோருக்கு உடல் நலக்குறைவு: மகன் தற்கொலை

Published On 2022-07-05 08:44 GMT   |   Update On 2022-07-05 08:44 GMT
  • விழுப்புரம் அருகே பெற்றோருக்கு உடல் நலக்குறைவால் மகன் தற்கொலை செய்துகொண்டார்.
  • மனமுடைந்த சூர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சூர்யா (வயது 19). ஐ.டி.ஐ. முடித்துள்ளார். ஆனால் இவரது பெற்றோருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சூர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News