உள்ளூர் செய்திகள்

வேப்பூர் அருகே 500 கிலோ ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது

Published On 2022-08-17 13:40 IST   |   Update On 2022-08-17 13:40:00 IST
  • வேப்பூர் அருகே 500 கிலோ ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இதில் பழனிச்சாமி என்பவர் தலைமறைவாக உள்ளார்.

கடலூர்:

வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில் ரேசனஅரிசி கடத்திசெல்வதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமைப்பொருள் குற்றப்பு லனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் கீழக்குறிச்சி கிராமத்திற்கு சென்றபோது பெரியசாமி என்பவரது வீட்டிற்கு அருகிலிருந்து மினிலாரியில் ரேசன் அரிசி கடத்தி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மங்களூர் பகுதியைச் சேர்ந்த பாலு (25), பெரியசாமி (38), காசிலிங்கம் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பழனிச்சாமி என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களி டமிருந்து 50 கிலோ எடை கொண்ட 10மூட்டையாக 500கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News