உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே ரூ.72 லட்சத்தை திருப்பி கேட்ட வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

Published On 2022-08-23 06:23 GMT   |   Update On 2022-08-23 06:23 GMT
புகாரின் பேரில் எலவனசூர் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரியான் ஜோஸ்சை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனுசூர்கோட்டை அருகே உள்ள எறையூர் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ (வயது 25).இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரியான் ஹாஸ் என்பவரை காயின் பிசினஸ் செய்ய வருமாறு கூறினார். இதனை அடுத்து அதே பகுதியைச் சேர்ந்த விக்டர் இளயான் ராஜ் மற்றும் அத்துவான் ஆரோக்கிய ராஜ் ஆகிய இருவரிடம் இது பற்றி கூறினார்.

அதன் பின்னர் அத்து வான் ஆரோக்கியராஜ் என்பவரிடம் 72 லட்சம் பணம் வாங்கி பிரிட்டோ முன்னிலையில் ரியான் ஜோசிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை திருப்பி கேட்டதால் பணத்தை வாங்கிய ரியான் ஜோஸ் பிரிட்டோவை அசிங்கமாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து பிரிட்டோ எலவனசூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனசூர் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரியான் ஜோஸ்சை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News