திருநாவலூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய விவசாயி கைது
- தனது மகன் காட்ச்சனின் மாற்று சான்றிதழை தருமாறு தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார்.
- ஆத்திரமடைந்த அந்தோணி தலைமை ஆசிரியர் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் அவரை திட்டி கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை தாலுகா சேந்தமங்கலத்தில் ஆதிதிராவிடர் நல பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனுவாசன் (வயது 52) தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் காட்சன் (வயது 5) அதே பள்ளியில் படித்து வருகிறான். நேற்று அந்தோணி பள்ளிக்குச் சென்று தனது மகன் காட்ச்சனின் மாற்று சான்றிதழை தருமாறு தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அதற்கு தலைமை ஆசிரியர் சீனுவாசன் காலதாமதம் ஆகும். நான் பின்னர் எடுத்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆத்திரமடைந்த அந்தோணி தலைமை ஆசிரியர் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் அவரை திட்டி கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து தலைமை ஆசிரியர் சீனுவாசன் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து அந்தோணியை கைது செய்தனர்.