உள்ளூர் செய்திகள்
திருக்கோவிலூர் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் கைது
- திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
- விற்பனை செய்த ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு கிடைத்து தகவலின் பேரில் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் சோதனை செய்த போது அவரிடம் தடை செய்யப்பட்ட போதை, புகையிலை மற்றும் பாக்குகள் ஆயிரம் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதை விற்பனை செய்த ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.