உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2022-07-31 06:21 GMT   |   Update On 2022-07-31 06:21 GMT
தியாகதுருகம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 36) கொத்தனார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் கவிதா (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கவிதா தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கமாக கடைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News