உள்ளூர் செய்திகள்
தளி அருகே பூ வியாபாரி ஏரியில் மூழ்கி சாவு
- பூப்பறிக்க சென்ற போது ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
- நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கும்மாளபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் தேவர்கொட்டப்பா (வயது 70).
பூ வியாபாரியான இவர் கடந்த 1-ந்தேதி பூப்பறிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.