உள்ளூர் செய்திகள்

தளி அருகே பூ வியாபாரி ஏரியில் மூழ்கி சாவு

Published On 2022-08-03 14:41 IST   |   Update On 2022-08-03 14:41:00 IST
  • பூப்பறிக்க சென்ற போது ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
  • நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கும்மாளபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் தேவர்கொட்டப்பா (வயது 70).

பூ வியாபாரியான இவர் கடந்த 1-ந்தேதி பூப்பறிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள ஏரியில் தவறி விழுந்துள்ளார்.

இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News