உள்ளூர் செய்திகள்

கண் தெரியாத 2 குழந்தைகளுடன் ஜஞ்சுவப்பா.

சூளகிரி அருகே கண்தெரியாத 2 குழந்தைகளின் தந்தை உதவிகேட்டு அரசுக்கு கோரிக்கை

Published On 2022-08-02 15:32 IST   |   Update On 2022-08-02 15:32:00 IST
  • தலையில் கட்டியால் அவதிபட்டு 7 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தும் பலனின்றி ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.
  • ஜஞ்சுவப்பாவின் 3 - வது மகள் சுஜாதா மற்றும் 4-வது மகன் பஸ்வராஜ் இருவருக்கும் சிறு வயதில் இருந்தே கண் பார்வையில்லை

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பெத்த சிகரளப்பள்ளி ஊராட்சி, கங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசப்பா மகன் ஜஞ்சுவப்பா (வயது 47). இவர் அருகே உள்ள குவாரியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பர்வதம்மா என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில் பர்வதம்மா தலையில் கட்டியால் அவதிபட்டு 7 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தும் பலனின்றி ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் ஜஞ்சுவப்பாவின் மூத்த மகள் கமலாவுக்கு திருமண மாகி 2 குழந்தைகள் உள்ளனர். கெலமங்கலத்தில் வசித்து வந்த கமலா ரத்த புற்றுநோயால் அவதிபட்டு அவரும் இறந்துவிட்டார்.ஜஞ்சுவப்பாவின் 2-வது மகன் தனுஜெயம் திருமண மாகி வெளியூரில் உள்ளார். ஜஞ்சுவப்பாவின் 3 - வது மகள் சுஜாதா மற்றும் 4-வது மகன் பஸ்வராஜ் இருவருக்கும் சிறு வயதில் இருந்தே கண் பார்வையில்லை. தற்போது 2 பேரும் ஆஸ்டலில் தங்கி இருந்து படித்து வருகின்றனர். 2 பேரும் படிப்பிலும், பாடல் பாடுவதிலும் இசை அமைப்பதிலும் ஆர்வமாக உள்ளனர். அரசு மூலம் உதவிகள் கிடைத்தால் இவர்களது எதிர்காலத்திற்கு வாய்ப்பாக அமையும் என்று ஜஞ்சுவப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News