உள்ளூர் செய்திகள்

சிங்காரபேட்டை அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பூச்சி மருந்து குடித்த கணவர் சாவு

Published On 2022-10-22 15:29 IST   |   Update On 2022-10-22 15:29:00 IST
  • மனைவி ராணி கடந்த 14-ந்தேதி அன்று இறந்தார்
  • மனைவி இறந்த மறுநாள் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அருகே பெரியதள்ளப்பாடி அடுத்துள்ள கெடகானூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது55). இவரது மனைவி ராணி (45). இவர் கடந்த 14-ந்தேதி அன்று இறந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆனந்தன் மனைவி இறந்த மறுநாள் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிங்காரபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News