உள்ளூர் செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2022-11-20 15:22 IST   |   Update On 2022-11-20 15:22:00 IST
  • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.
  • அவர்களை மடக்கி பிடித்த போலீசார் சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள பெரிய தள்ளப்பாடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது அப்பகுதியில் உள்ள கோவிலின் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடித்த சிங்காரப்பேட்டை போலீசார் அவர்களி டமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.600 பணத்தையும் பறிமுதல் செய்தனர். பணம் வைத்து சூதாடியதாக திருப்பதி (வயது 33), மாதேஷ் (35), கார்த்திக்மணி (27), லட்சுமணன் (36), முருகன் (40) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News