உள்ளூர் செய்திகள்

சிங்காரபேட்டை அருகே விஷம் வைத்து 2 மாடுகள் பலி

Published On 2022-08-17 15:55 IST   |   Update On 2022-08-17 15:55:00 IST
  • இவருக்கும், குப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
  • நேற்று ருக்குமணியின் 2 பசுமாடுகள் கொட்டகையில் இறந்து கிடந்தது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள பண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் ருக்குமணி. இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். இவருக்கும், குப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.

நேற்று ருக்குமணியின் 2 பசுமாடுகள் கொட்டகையில் இறந்து கிடந்தது.

இது குறித்து அவர் சிங்காரபேட்டை போலீசில் குப்புசாமி என்பவர் தீவனத்தில் யூரியாவை கலந்து கொடுத்ததால் எனது பசுமாடுகள் இறந்துள்ளது என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குப்புசாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News